'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் இறந்த மூவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி! கமல் அறிவிப்பு!
இந்தியன் 2 படப்பிடிப்பு பணியின் போது, ராட்சத கிரேன் கிழுந்து பலியான, கிருஷ்ணன், மது, மற்றும் சந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.
இந்தியன் 2 படப்பிடிப்பு பணியின் போது, ராட்சத கிரேன் கிழுந்து பலியான, கிருஷ்ணன், மது, மற்றும் சந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.
இயக்குனர் ஷங்கர் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயக்கி வரும், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரவு, பகல் பாராமல் முழு வீச்சில் நடந்து வருகிறது.
அதன் படி, நேற்று இரவும் வழக்கும்போல் படப்பிடிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். மிகப்பெரிய கிரேன் உதவியுடன் செட் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமா, ராட்சத கிரேன், கீழே விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டன்ட் மது மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இறந்த மூவரின் உடலும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர், தற்போது தொடந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, உயிரிழந்த மூவரின் உடலும், பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மூவரின் குடும்பத்திற்கும் ரூ.1 கோடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.