ilaiyaraj song issue

இளையராஜா எஸ்பிபிக்கு தனது பாடல்களை பாடக்கூடாது என கூறி நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பலரும் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை கூறிவருகின்றனர். 

இந்நிலையில் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த, நடிகர் மோகன் ராமன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

"பாடல்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை, தயாரிப்பாளருக்கும் தான். பலருக்கு சொந்தமான ஒன்றின் ராயல்டி பணம் வசூல் செய்ய எப்படி நீங்கள் மட்டும் நோட்டீஸ் அனுப்ப முடியும் என்றும். பாடலாசிரியர் அல்லது தயாரிப்பாளர் உங்களுக்கு அனுமதி கொடுத்தார்களா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

உங்கள் வழக்கறிஞர் 'இளையராஜா பாடலை பாடி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் பாடகருக்கு தான் நோட்டீஸ் அனுப்பினோம். கோவில் கச்சேரியில் பாடுபவர்களுக்கு அல்ல' என சொல்லியிருப்பதை பார்த்தால், நீங்கள் பணம் தான் முக்கியம் என நினைப்பது தெரிகிறது.

நீங்கள் ஞானி என நினைத்தேன், ஆனால் ஒரு ஞானி இப்படி செய்யமாட்டார்" என தெரிவித்துள்ளார்