Kiran : "சுந்தர் சி சொன்னதால் அதை செய்தேன்.. ஆனால் இப்பவும் அதற்காக வருந்துகிறேன்" - மனம் நொந்த கிரண்!
Actress Kiran Rathod : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து புகழ்பெற்ற நடிகை தான் கிரண். இவர் ராஜஸ்தானில் பிறந்தவர்.
![I Feel Bad Acting in Aambala Movie actress kiran rathod opens up about sundar c ans I Feel Bad Acting in Aambala Movie actress kiran rathod opens up about sundar c ans](https://static-ai.asianetnews.com/images/01htfssxbnzax6567yeg8aq9tv/kiran_363x203xt.jpg)
ஹிந்தி திரைஉலகில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் படங்களில் நடிக்க ஆரம்பித்து, கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஜெமினி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் கிரண். ராஜஸ்தானில் பிறந்த கிரண் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.
தல அஜித்துடன் "வில்லன்", உலக நாயகன் கமல்ஹாசனுடன் "அன்பே சிவம்", டாப் ஸ்டார் பிரசாந்துடன் "வின்னர்" போன்ற பல நல்ல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்லும் நாயகியாக அவர் மாறினார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை. அவர் எவ்வளவு தான் கவர்ச்சியில் அசத்தினாலும், அவருக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" திரைப்படம் குறித்து தனது மன வருத்தத்தை பற்றி ஒரு தனியார் Youtube சேனலில் பேசியுள்ளார் கிரண்.
இயக்குனர் சுந்தர் சி எனக்கு ஒரு சகோதரரை போன்றவர், அவர் சொன்னதால் தான் "ஆம்பள" திரைப்படத்தில் நான் நடித்தேன். சின்னப்பொண்ணு என்கின்ற அந்த கதாபாத்திரத்தில் ஏதோ ஒரு செட் பிராப்பர்ட்டியை போலத் தான் நான் வந்து செல்வேன். உண்மையில் அந்த திரைப்படம் எனக்கு மிகப் பெரிய வருத்தத்தை கொடுத்தது.
சுந்தர் சி சொன்னதனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், அந்த படத்தில் நடித்ததற்காக இன்றும் நான் வருத்தப்படுகிறேன். எனது திருமண வாழ்க்கையும் பெரிய அளவில் சோபிக்கவில்லை, காதலை நம்பி ஏமார்ந்த பெண்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான இளமை ஊஞ்சல் என்ற படத்துக்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவில்லை.