நடிகை ஹன்சிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா தன்னுடைய 50 - வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா தன்னுடைய 50 - வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஹன்சிகா, காவி உடை அணிந்தவாறும், கஞ்சா பிடிப்பது போன்றும்... இவருக்கு அருகில் சில சாமியார்கள் அமர்ந்திருப்பது போன்றும் பின்புறம் காசி இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என கூறி ஏற்கனவே பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இந்த போஸ்டர் குறித்து வாணியம்பாடி பகுதியில் ஒருவர் போலீசாரிடமும் புகார் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த, நாராயணன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில் இந்து மதம் மற்றும் பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகா புகைப்பது போன்று உள்ளதாகவும் எனவே இந்தப் படத்தில் நடித்த ஹன்சிகா மற்றும் இந்த படத்தின் இயக்குனர் ஜமீல் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.