கனடா பிரதமரை தமிழகத்திற்கு அழைத்த ஜி.வி. பிரகாஷ்...!
கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் வாட மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்...
குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை இந்திய முக்கிய புள்ளிகள் அவரை வெகுவாக கவனித்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் அவரை தமிழகத்திற்கு வருமாறு இருகரம் கூப்பி அழைப்பதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் என் தாய் தமிழ் உறவுகளோடு பொங்கல் திருநாளை கொண்டாடிய உங்களை தமிழ்நாட்டிற்கு என் இருகரம் கூப்பி வரவேற்கிறேன் #WelcomeJustinTrudeau pic.twitter.com/WKs0cu36J7
— G.V.Prakash Kumar (@gvprakash) February 22, 2018
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை,கனடாவில் வாழும் தமிழ் மக்களோடு,தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கனடாவில் தமிழ் மக்களோடு பொங்கல் கொண்டாடினார்
அதிலிருந்து தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர்,தற்போது இந்தியாவிற்கு வருகை புரிதுள்ளதால்,தமிழகத்திற்கும் அவர் வர வேண்டும் என்பதற்காக ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.