gun shoot in india
துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் கொடிகட்டிப் பறப்பது அமெரிக்காவில்தான். அங்குதான் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வரை அனைவரும் துப்பாக்கியை விளையாட்டுப் பொருள் போல பயன்படுத்தி அவ்வப்போது சுட்டுவிடுவதையும் செய்திகளில் பார்க்கிறோம்.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலும் கத்தி, அருவா என்றுதான் இப்போதும் கூட சண்டை போட்டுகொண்டு பிறகு சிறைக்குச் சென்றுவிடுவதையும் அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம். சினிமா சண்டைக் காட்சிகளில் வருவது போல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொண்ட காட்சிகளை நம் நாட்டில் பார்த்திருக்கிறீர்களா... இதோ அந்த காட்சிகள்... தற்போது இந்தத் துப்பாக்கிச்சூடு தான் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. எல்லாம் தீபாவளி படுத்தும் பாடு...!
