கௌதம் கார்த்திக்கின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது..!
கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஹர ஹர மஹாதேவகி. அடல்ட் காமெடியாக உருவான இத்திரைப்படம் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தையும் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர் தவிர இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து பார்ன் ஆந்தம் வெளியாகி ஹிட்டானது. அதில் நடித்த கவர்ச்சி நடிகைகளையும் சுசி லீக்ஸ் கலாய்த்து இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பேனர் தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு தேவர் ஆட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஆக்சன் சென்டிமென்ட் படங்களான குட்டி புலி, கொம்பன், மருது மற்றும் கொடி வீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். அதனால் இந்தப் படமும் சென்டிமென்ட் சார்ந்த கதையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.