Asianet News TamilAsianet News Tamil

தனக்கு பாலியல் தொந்தரவு தந்தவர்களின் ‘மி டு’கதைதான் கங்கனா ரனாவத்தின் சுயசரிதையா?...

’இந்தியில் என் சுயசரிதையாக நான் இயக்கும் படத்தில் பாலிவுட்டில் எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அந்தரங்க சமாச்சாரங்களைப் பற்றியோ தனிமனிதர்களைப் பற்றி அவதூறான காட்சிகளோ கண்டிப்பாக இருக்காது’ என்கிறார் மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்.

gkangana ranauts biopic
Author
Chennai, First Published Mar 3, 2019, 5:04 PM IST


’இந்தியில் என் சுயசரிதையாக நான் இயக்கும் படத்தில் பாலிவுட்டில் எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அந்தரங்க சமாச்சாரங்களைப் பற்றியோ தனிமனிதர்களைப் பற்றி அவதூறான காட்சிகளோ கண்டிப்பாக இருக்காது’ என்கிறார் மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்.gkangana ranauts biopic

இந்தியில்  வசூலில் சக்கைப் போடுபோட்ட  ‘மணிகர்னிகா’ படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான கங்கனா ரனாவத் அடுத்து தனது சொந்தக் கதையைத் தானே  இயக்கி,தயாரித்து, நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்காக கதை, திரைக்கதையை இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை எழுதுகிறார்.

இப்படம் தொடர்பான கதைவிவாதமும் நட்சத்திர தேடலும் சூடுபிடித்துள்ள நிலையில் பாலிவுட் முழுக்கவே கங்கனா தனது சுயசரிதையின் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை தோலுரிக்கப்போகிறார், மற்றவர்கள் ‘மி டு’வை அறிக்கையாகக் கொடுத்துக்கொண்டிருக்க அதை இவர் படமாகவே எடுக்கவிருக்கிறார் என்கிற பரபரப்பு செய்திகள் நடமாடி வந்தன.gkangana ranauts biopic

இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் கங்கனா, ‘ஒரு நடிகையாக எல்லோரும் சந்தித்த கசப்பான சில விஷயங்களைக் கடந்துதான் நானும் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் அதை எனது கதையில் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. எனது வெற்றியில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் நேசம் வழிமுழுக்க இருக்கிறது. அந்த நேசத்தைப் பிடித்துக்கொண்டு நான் இந்த உயரத்துக்குப் பயணித்த கதையை மட்டுமே எனது சுயசரிதையில் பேச விரும்புகிறேன்’ என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios