gangai amaran talking about ilayaraja controvercy
இசைஞானி இளையராஜாவிற்கு ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய மரியாதை உண்டு, இன்று வரை அவரது இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்...
இந்நிலையில் இவர் செய்த ஒரு காரியம், இதை இளையராஜா தான் செய்தாரா....? என்று வாய் பிளக்க வைத்துள்ளது காரணம்... இது வரை ரசிகர்கள் கண்களுக்கு அமைதியின் சொரூபமாகவே தெரிந்தவர் இந்த செயலை செய்தாரா என்கின்ற வியப்பு தான்.
தற்போது இதுகுறித்து பேசிய கங்கை அமரன், இளையராஜா செய்திருப்பது சட்டப்படி குற்றம் தான். ஆனால் இதை நான் எடுத்து சொல்ல போனால் அதை அவர் காது கொடுத்து கூட கேட்க மாட்டார்.
இசைஞானி என்கிற கர்வத்தில் உச்சத்தில் இருப்பதாலும், அவர் எனக்கு அண்ணனாக பிறந்து விட்டதாலும் அவர் பேச்சை தான் நான் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார் என கோபமாக கூறியுள்ளார் கங்கை அமரன்.
