முதல் முறையாக ஓவியாவை புகழ்ந்த சினேகன்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் தலைவன் என்கிற பொறுப்பை ஏற்றவர் கவிஞர் சினேகன் தான். ஓவியா நேர்மையாக நடந்துக்கொண்டாலும் அவர் மீது சில கேள்விகளை திணித்தாள் அவர் அந்த இடத்தை விட்டு எழுத்து சென்று விடுவார்.
இப்படி பல முறை சினேகன் தலைவராக இருந்தபோது ஓவியா அவரை அசிங்கப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இனத்தால் ஓவியா மீது பல நாட்களாக சினேகனுக்கு கோபம் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பெண்களாலும் அவர் புறக்கணிக்கப்பட்டபோது, ஓவியாவை மதித்து அவரது ஆறுதல் சொன்னவர்கள் சினேகனும் அரவும் தான். பிக் பாஸ் ஆண் போட்டியாளர்கள் மேல் இருந்த நம்பிக்கையில் ஓவியா ஆண்கள் அறையில் படுத்து தூங்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு சம்பவங்களை சுற்றி காட்டி, ஆண்களை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன். சினேகனிடம் நீங்கள் ஓவியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது.
ஓவியா அனைவராலும் ஒதுக்கப்படும் தன்னிடம் பல முறை போது பேசியதுண்டு ஆனால் ஒரு முறை கூட அவர் யாரை பற்றியும் குறை கூறியது இல்லை என்று சொல்லி ஓவியாவை புகழ்ந்து தள்ளினார். சினேகன் வாயால் இப்படி ஒரு பாராட்டை எதிர்பார்க்காத ஓவியா சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டார்.