பாத்திபா பாபு இப்படிப்பட்டவரா..? மனம் திறந்த கணவர் பாபு..!
தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு ஒரு வாரத்திற்கு பின் முதல் ஆளாய் வெளியேறினார்.
தமிழில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு ஒரு வாரத்திற்கு பின் முதல் ஆளாய் வெளியேறினார்.
அதற்கு முன்னதாக ஒரு சிறப்பு பேட்டியில் பாத்திமாவின் கணவர் பாபு மற்றும் இரண்டு மகன்களும் பாத்திமாவுக்கு ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அப்போது, "பாத்திமா ஒரு குழந்தை மாதிரி அதனால்தான் நாங்கள் வீட்டில் பேபி என அழைப்போம். அவருக்கு எது பிடிக்குமோ அதையே செய்வார்.. நாங்களும் அதற்கு விருப்பப்படுவோம்.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் சென்றபோது அவரை மிகவும் மிஸ் பண்ணோம்... காரணம் அவருடன் நினைத்தபோது பேசக்கூட முடியாது... உடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா இருப்பதால் அவருக்கு பக்கபலமாக இருப்பார் என நினைத்தோம். ஆனால் பாத்திமாவை அவர் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார். அப்போது இருந்த வனிதா வேறு.. இப்போது இருக்கும் வனிதா வேறு.. பாத்திமாவை அக்கா அக்கா என்று தான் அழைப்பார் ஆனால் வனிதாவிடம் நிறைய மாற்றம் தெரிகிறது"... என தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளிய வந்த பாத்திமாவும் வனிதாவை பற்றி தான் அவர் மிகவும் டாமினேட் செய்வதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.