‘கேஜிஎஃப் 2’-வை கோடிக்கணக்கில் பேரம் பேசிய பிரபல ஓடிடி தளம்... அமவுண்டைக் கேட்டாலே தலை சுத்துதே...!
முன்னணி ஓடிடி தளம் ஒன்று கே.ஜி.எஃப் 2 படக்குழுவினரை தொடர்பு கொண்டு படத்தை தங்களது தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரம்மாண்டமான கே.ஜி.எஃப் படத்தின் வெற்றி ஓட்டுமொத்த திரையுலகையும் வாய் பிளக்க வைத்தது. 2018ம் ஆண்டு கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த நிலையில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கேஜிஎப் சாப்டர் 2 எடுக்கப்பட்டது.
யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. மேலும் வரும் ஜூலை 16 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா 2வது அலையால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் செப்டம்பர் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் முன்னணி ஓடிடி தளம் ஒன்று கே.ஜி.எஃப் 2 படக்குழுவினரை தொடர்பு கொண்டு படத்தை தங்களது தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் வரை தரத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் நடிகர் யஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எவ்வளவு காலமானாலும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என பட்டென சொல்லிவிட்டார்களாம். இதற்கு முன்னதாக ‘கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.