Asianet News TamilAsianet News Tamil

டி.வி. தொகுப்பாளினியை விஷம் கொடுத்து எரித்து கொன்ற கொடூர கணவன்... கள்ளக்காதலால் நடந்த பயங்கரம்...!

கடந்த 30ம் தேதி கணவர் ரவீந்தர் பால் சிங் உடன் நைனிடால் சென்ற அனிதா சிங், கரிக்கட்டையாக கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Famous Female Anchor Poisoned and Burned By Husband For Illegal Contact
Author
Chennai, First Published Feb 13, 2020, 4:12 PM IST

பஞ்சாப்பில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் அனிதா சிங். இவரது உடல் எரிந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ம் தேதி கணவர் ரவீந்தர் பால் சிங் உடன் நைனிடால் சென்ற அனிதா சிங், கரிக்கட்டையாக கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Famous Female Anchor Poisoned and Burned By Husband For Illegal Contact

சந்தேகத்தின் பேரில் கணவர் ரவீந்தர் பால் சிங்கை விசாரித்த போலீசார், பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரபல தொகுப்பாளினியான அனிதா சிங்கிற்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது அவரது கணவருக்கு தெரியவந்துள்ளது.

Famous Female Anchor Poisoned and Burned By Husband For Illegal Contact

இதையடுத்து அனிதா சிங்கை நைனிடாவில் உள்ள தனது நண்பரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ரவீந்தர் பால். அங்கு நண்பர் குல்தீப்பின் வீட்டில் உணவு அருந்தும் போது, அனிதா சிங்கிற்கு விஷம் கலந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. அந்த உணவை உட்கொண்ட அனிதா மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ரவீந்தர் பால் சிங்கும், அவரது நண்பர் குல்தீப்பும் சேர்ந்து அனிதாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். 

Famous Female Anchor Poisoned and Burned By Husband For Illegal Contact

போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காகவும், உடலை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவும் அனிதாவின் உடலை காட்டுக்கு எடுத்துச் சென்ற இருவரும், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios