familiar anchor did suicide in andra

பிரபல தொகுப்பாளினி தற்கொலை...காதல் கணவர் செய்த மறைமுக லீலை... துடிதுடித்துப்போனது என்னமோ பெண்ணின் பெற்றோர்களே..!

தெலுங்கு சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் தேஜஸ்வனி. இவர் ஒரு சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கியும் அதே வேளையில் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவர் திடீரென தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேஜஸ்வனி ஐடி ஊழியரான பவன் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவர்கள் திருமணத்திற்கு இரண்டு பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில ஆண்டுகள் துபாயில் இருந்து வந்துள்ளனர்.

பின்னர் சமீபத்தில் இந்தியா திரும்பிய இவர்கள்,பவன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென தன் அறைக்கு சென்று நீண்ட நேரமாக கதவை திறக்காமல் இருந்துள்ளார் தேஜஸ்வனி.

இதனால் சந்தேகம் அடைந்த இவருடைய மாமியார், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது தேஜஸ்வனி தூக்கில் தொங்கியிருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், "தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததால், அதிர்சியடைந்து மனம் உடைந்து போன, தேஜஸ்வனி தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் தேஜஸ்வணியின் கணவர் பவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் கணவரையே முழுக்க முழுக்க நம்பி, பெற்றோர்களை தூக்கி எறிந்துவிட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடுமை,சமூதாயத்தில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், இன்றைய சமுதாயத்தினருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது.