’தமிழ்சினிமாவில் எனக்கு இருந்த நல்ல பெயரை ஷங்கர் கெடுத்துவிட்டார்’... செம டென்சன் எமி
‘ஐ’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டுவைத்த அதே ஷங்கர் ‘2.0’ படத்தின் மூலம் சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டார்’ என்று புலம்பி வருகிறாம் நடிகை எமி ஜாக்ஷன்.
‘ஐ’ படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டுவைத்த அதே ஷங்கர் ‘2.0’ படத்தின் மூலம் சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டார்’ என்று புலம்பி வருகிறாம் நடிகை எமி ஜாக்ஷன்.
ரஜினி,ஷங்கரின் ‘2.0’ படத்தில் மிகப் பரிதாபமான ஒரு ரோபோ கேரக்டரில் ரஜினியின் செக்ரடரியாக நடித்திருந்தார் எமி ஜாக்ஷன். அவருக்கு படத்தில் காதல் காட்சிகளோ டூயட் பாடல்களோ இல்லை. இந்த கேரக்டரில் எமி ஜாக்ஷனுக்குப் பதில் ஒரு ரிச் கேர்ளே பண்ணியிருக்கலாம் என்று ஏற்கனவே கமெண்டுகள் வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில், ‘2.0’ ரிலீஸுக்குப் பின்னர் புதிய படங்கள் எதுவும் எமிக்கு வரவில்லை. வழக்கம்போல் இன்ஸ்டாகிராமில் தனது கிளுகிளு படங்களை விடாமல் அப்லோட் பண்ணிக்கொண்டிருக்கிறார். ‘2.0’ குறித்து தனது ஃபாலோயர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் எமி பதிலும் சொல்வதில்லை. இவ்வளவு டம்மியான கேரக்டருக்கு ஷங்கர் தன்னை அழைத்திருக்கவேண்டியதில்லை. ‘ஐ’ படத்தில் என்னை ஏற்றிவிட்ட ஷங்கர் தன் படம் மூலமே என்னைக் கீழே இறக்கிவிட்டுவிட்டார் என்று புலம்புகிறாராம் எமி.