பிரபல நடிகையை படப்பிடிப்பில் கடித்து குதறிய நாய்...?
பிரபல இந்தி நடிகை ரீனா அகர்வால். இவர் அஜிந்தா, தலாஷ், ஜாலாபாப்ஹடோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரு சில பாலிவுட் டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த 'கியாஹால் மிஸ்டர் பஞ்சால்' என்ற டி.வி தொடரின் படப்பிடிப்பில் ரீனா அகர்வால் பங்கேற்று நடித்து வந்தார்.
அப்போது ஒரு நாய் அவரை பயங்கரமாக கடித்து குதறியது. முகத்தில் பல இடங்களில் அவருடிய முகத்தை நாய் பூரியும், கடுமையாக கடுத்தும் வைத்தால் முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
நாயிடம் மாட்டிக்கொண்டு அலறிய ரீனாவை காப்பாற்றிய படக்குழுவினர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இவருக்கு முகத்தில் அதிகமான காயங்கள் ஏற்பட்ட சிதைத்துள்ளதாகவும். முகத்தில் தையல் போட்டு வலி தெரியாமல் இருக்க மருந்துகள் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக படபிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் இவரால் சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாது என்றும் ரீனா அகர்வால் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.