இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக உளறிக்கொட்டுபவர்கள் என்கிற பட்டியலில் அ.தி.மு.க. அமைச்சர்களைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாலருமான பிரேமலதா.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகமாக உளறிக்கொட்டுபவர்கள் என்கிற பட்டியலில் அ.தி.மு.க. அமைச்சர்களைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. பொருளாலருமான பிரேமலதா.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதி மிகவும் நெருங்கிவரும் சூழ்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அனைத்துக்கட்சி வேட்பாளர்களுமே கட்சிச் சின்னங்கள், வேட்பாளர்கள் பெயர்கள் உட்பட அனைத்திலுமே பெருங்குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் பிரேமலதா இரட்டை இலை சின்னத்துக்குப் பதில் பல இடங்களில் முரசு சின்னத்துக்கே ஓட்டுக் கேட்கிறார். இதேபோல், அண்மையில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை அருகில் வைத்துக்கொண்டே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்' எனக் கூறி சர்ச்சைய கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா, பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்பது போல் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இவரது அந்த சர்ச்சைப் பேச்சை எதிர்க்கட்சிகளில் வலைதளங்களில் ஏற்றி வைரலாக்கிவருகிறார்கள்.