வெளியாகும் 'தர்பார்' செகண்ட் லுக்..! செம்ம குஷியில் ரஜினி ரசிகர்கள்!
'பேட்ட' படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது.
'பேட்ட' படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை, தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.
'தளபதி' படத்திற்கு பின், ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்திற்கு சந்தோஷ் சிவன் மீண்டும் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீபிரசாத் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே, தலைவர் போலீஸ் கெட்டப்பில், இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து இரண்டாவது லுக், சரியாக மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.