தனுஷ் தற்போது பல படங்களில் கமிட் ஆகிவருகின்றார். இதில் எல்லோருக்கும் ஆச்சரியமாக சௌந்தர்யா இயக்கும் விஜபி-2 பூஜையும் சமீபத்தில் போட்டனர்.

இதை தொடர்ந்து இந்த கூட்டணி எப்படி உருவானது என பலருக்கும் ஆச்சரியம். ஒரு நாள் தாணு, ரஜினியை பார்க்க செல்ல, தனுஷ் மகன் யாத்ரா ‘எங்க தாத்தாவ வச்சு படம் பண்றீங்க, ஏன் எங்க அப்பாவ வச்சு பண்ண மாட்டீங்களா’ என கேட்க தாணு செல்லமாக தட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.

அதை தொடர்ந்து சௌந்தர்யா, தாணுவிடம் ஒரு கதை சொல்ல, இதற்கு தனுஷ் சரியாக இருப்பார் என அவரிடம் கதை போக, தனுஷ் சொன்ன சில திருத்தங்களுக்கு பிறகு இந்த கூட்டணி உருவாகியுள்ளது.

எப்படியோ யாத்ரா கேட்ட கேள்வி படமாகவே உருவாகிவிட்டது.