Asianet News TamilAsianet News Tamil

“எஸ்.பி.பி.குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்”... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து...!

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார். 

CM Edappadi palaniswami Pray For SP Balasubrahmanyam Speed Recovery
Author
Chennai, First Published Aug 20, 2020, 8:19 PM IST

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. 

CM Edappadi palaniswami Pray For SP Balasubrahmanyam Speed Recovery

இதனையடுத்து இன்று இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர், இசைப்பிரபலங்கள் மற்றும் இசைப்பிரியர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். சரியாக 6 மணிக்கு தங்களது வீடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை ஒளிக்கவிட்டு, இறைவனிடம் அவர் உடல் நலம் பெற வேண்டுமென வேண்டிக்கொண்டனர். 

CM Edappadi palaniswami Pray For SP Balasubrahmanyam Speed Recovery

தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.பி. ரசிகர்களும், குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் எஸ்.பி.பி. மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்தது. 

CM Edappadi palaniswami Pray For SP Balasubrahmanyam Speed Recovery

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டுமென இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios