பிஞ்சிக் குழந்தையை கதற கதற சீரழித்து கொலை செய்த கொடூரர்கள்...! கண்டனம் தெரிவிக்கும் பிரபலங்கள்...!
ஜம்மு காஷ்மீரில் 8 வயதே ஆகும் ஆஷிபா என்கிற சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய கொலை சம்பவம் ஓட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஷிபாவின் இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து, கண்டிப்பாக நீதி வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்து வருகின்றனர்.
இது குறித்து நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கூறியுள்ளது...
"மன்னித்து விடு ஆஷிபா, இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை என்றும் உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், உன் இழைப்பு ஒரு மனிதனாக, அப்பாவாக, குடிமகனாக என்னை கோபப்படுத்துகிறது. இனி எதிர்காலத்திலாவது உன்னை போன்று எந்த குழந்தைக்கும் இது போன்ற அநீதி நடக்காமல் இருக்க போராடுவேன் என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u
— Kamal Haasan (@ikamalhaasan) April 13, 2018