Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்... 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

case filed against Bigg Boss vikraman under 13 section in vadapalani police station gan
Author
First Published Oct 29, 2023, 2:31 PM IST

விசிக கட்சி நிர்வாகியாக பணியாற்றி வரும் விக்ரமன், கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். அசீம் முதலிடம் பிடித்த நிலையில் விக்ரமனுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அசீமும், விக்ரமனும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டது அந்த சீசனை மேலும் விறுவிறுப்பாக்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரமன் மீது கடந்த ஜூலை மாதம் புகார் ஒன்று முன்வைக்கப்பட்டது. கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்த புகாரில், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும் கூறி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

case filed against Bigg Boss vikraman under 13 section in vadapalani police station gan

அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக அவர் பதவி வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் அதன் மீது ஆக்‌ஷன் எடுக்கப்படாததால், இதன்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கிருபாவின் இந்த புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் எனக் கூறி இருந்தார்.

இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விக்ரமன் மீது சென்னை வடபழனியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து விக்ரமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்... காதல் மோசடியில் சிக்கிய விக்ரமனை சீண்டிய அசீம்

Follow Us:
Download App:
  • android
  • ios