Asianet News TamilAsianet News Tamil

Breaking 'அவன் - இவன்' பட பிரச்சனை நடிகர் ஆர்யா நீதி மன்றத்தில் ஆஜர்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தின் பிரச்சனைக்காக, இன்று காலை நடிகர் ஆர்யா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

Breaking Avan Ivan Movie Problem Actor Arya attened in Court
Author
Chennai, First Published Mar 29, 2021, 12:11 PM IST

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' படத்தின் பிரச்சனைக்காக, இன்று காலை நடிகர் ஆர்யா நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Breaking Avan Ivan Movie Problem Actor Arya attened in Court

கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படம் 'அவன் - இவன்'. ஆர்யா விஷால் இணைந்து நடித்த, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. காதல், காமெடி,ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தையும் அளவான கலவையில் கொடுத்து ரசிகர்களை ரசிக்கவைத்திருந்தார் பாலா.

Breaking Avan Ivan Movie Problem Actor Arya attened in Court

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் இயக்குனர் பாலா அவதூறாக சித்தரித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இந்த படத்தின் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.  இயக்குனர் பாலா, தயாரிப்பு நிறுவனம், நடிகர் ஆர்யா, விஷால், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு குறித்து ஏற்கனவே இயக்குனர் பாலா ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்த நிலையில், இன்று நடிகர் ஆர்யா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios