லாஸ்லியாதான் டைட்டில் வின்னரா?...அதுக்காகத்தான் இத்தனை அழுகாச்சி நாடகங்களா பிக்பாஸ்??...
நேற்று 5 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா.சாண்டி, முகேன், தர்ஷன்,ஷெரின் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக வெளியிடப்படும் புரோமோக்களின் நடுநிலை நாயகியாக லாஸ்லியா மட்டுமே சித்தரிக்கப்படுகிறார். அவரது அழுகை மீண்டும் மீண்டும் ஹைலைட் செய்யப்படுகிறது.
லாஸ்லியாவை டைட்டில் வின்னராகக் கொண்டு வரும் சதித்திட்டத்துடன் தான் கவின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.கடந்த மூன்று நாட்களாக லாஸ்லியாவின் அழுகாச்சி காட்சிகள் இதற்காகவே தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
நேற்று 5 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கவின் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா.சாண்டி, முகேன், தர்ஷன்,ஷெரின் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக வெளியிடப்படும் புரோமோக்களின் நடுநிலை நாயகியாக லாஸ்லியா மட்டுமே சித்தரிக்கப்படுகிறார். அவரது அழுகை மீண்டும் மீண்டும் ஹைலைட் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா கவின் வெளியே சென்ற சோகத்திலிருந்து வெளிவரமுடியாமல் சோகத்துடன் உள்ளார். அப்போது தர்ஷன், சரிவிடு அதையே யோசிச்சிட்டு இருக்காதே.. என்று கூற, இல்லை அவன் பைனல்ஸ் வர வேண்டியவன். நான் பைனல்ஸ் போகணும்னு எனக்கு இல்ல. நான் அப்பா- அம்மாவுக்காகத் தான் இருக்கேன் என்று லாஸ்லியா கூறுகிறார். அதற்கு தர்ஷனோ, முடிஞ்சி போச்சு. அத பத்தி யோசிச்சு அழுதுட்டு இருக்குறது வேஸ்ட். பத்து நாளுக்கு அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அத போய் செய் என்கிறார்.கவின் வெளியேறிய பிறகு லாஸ்லியா அழுது முடித்து பின்பு மறுநாள் டாஸ்க் கூட நடைபெற்று முடிந்து விட்டது. இருந்தாலும் கவின் சென்ற அன்று நடந்த விஷயத்தையே மீண்டும் ஒளிபரப்பி டிஆர்பியை கூட்ட முயற்சிக்கிறது பிக் பாஸ் டீம்....
இவளுக்கு ஒரு 5 ரூபாய் கொடுத்து கதவை திறந்து விடுங்க சார் போய் தொலையட்டும்... இன்னும் வேறு யாரும் வெளியே போகவேண்டும் என்றால் அனுப்பி விடுங்கள்... அவங்க தான் Game விளையாடல நீங்களாவது விளையாடுங்க ....கவினை பிக்பாஸ் அனுப்பியிருந்தா நீங்க சொல்லுறதில ஒரு அருத்தம் இருக்கு. அவனா முடிவு பண்ணி போனா அதுக்கு தர்ஷன் என்னடா பண்ணமுடியும்? தர்ஷன் சொல்லி பார்த்தான் அவளவும்தான் பண்ணமுடியும்.....
பெரிய காவிய காதல் பண்ணிட்டு இப்போ ஒப்பாரி வச்சிட்டு இருக்காங்க. அந்த கவின் பய உள்ள இருந்த 90 நாளில் 3 பெண்களை கரெக்ட் பண்ணி இருக்கான். வெளியே போய் உண்மை நிலவரம் தெரிந்து இந்த பொண்ணு இலங்கைக்கு ஒரே ஓட்டமா ஓட போகுது...என்று கமெண்டுகள் வருகின்றன.