நேரடியாக தலைமை பொறுப்பை கைப்பற்றிய போட்டியாளர்...! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்...!
இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் போதே அறிவித்துவிட்டார்.
ஆனால், போட்டியளர்களுக்கு இது தெரியாது. எனவே நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உடைகளை பேக் செய்துக்கொண்டு வெளியேற தயாராக இருந்தபோது, இந்த வாரம் யாரும் எலிமிநேட் செய்யப்படவில்லை என்பதை நிகழ்ச்சியின் முடிவில் அறிவித்தார் கமல் .
இதைதொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது தலைவர் தேர்வு மற்றும் நாமினேஷன் நடைபெறுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில், அதிகபடியாக ஆனந்த் மற்றும் மும்தாஜ் பெயர் நாமினேட் செய்யப்படுகிறது. பின் பிக்பாஸ்சிடம் இருந்து வரும் கடிதத்தை ஜனனி படிக்கிறார்.
அதில் நித்யா உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, இந்த வீட்டின் சூழல் மேன்பட பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நீங்கள் நேரடியாக அறிவிக்கப்படுகிறீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. இதைகேட்டதுமே போட்டியாளர்கள் செம ஷாக் ஆகிறார்கள். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவி நித்யா என்பது உறுதியாகியுள்ளது.