சிறந்த நடிகருக்கான முதல் படத்திலேயே விருதை பெற்ற "பீச்சாங்கை கார்த்திக்"...
"சவாரி" "அச்சம் என்பது மடமையடா" "மாநகரம்" மற்றும் "பீச்சாங்கை" போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் "கார்த்திக்". பீச்சாங்கை படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியர்த்து இவருடைய பெயரை "பீச்சாங்கை கார்த்திக் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
சமீபத்தில் காமராஜர் அரங்கில் நடந்த "Studio one star icon hard" விருது வழங்கும் விழாவில் "பீச்சாங்கை" படத்திற்க்கான சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றார்.
இந்த விருதை பெற்ற பின் (பீச்சாங்கை) கார்த்தி மேடையில் பேசியபோது, இது தான் தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்த முதல் விருது என்றும் இந்த விருது கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் நான் ஹீரோவாக நடித்த முதல் படத்திற்க்கே விருத்தி கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார் (பீச்சாங்கை) "கார்த்திக்" பெருமித்ததோடு கூறியுள்ளார்.