Beast பீஸ்ட் படத்திற்கான ஒரு பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடலை அனிரூத் இசையில் விஜயே தனது சொந்த குரலில் பாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சனின் முந்தைய படைப்பான "கோலமாவு கோகிலா" நயன்தாராவின் புதிய பரிமாணத்தில் நாயகி சார்ந்த கதைக்களமாக மக்கள் மனதில் பதிந்த திரைப்படம். இதையடுத்துகோலமாவு கோகிலா" படத்திலிருந்து வெளியாகி மேக ஹிட் அடித்த "கல்யாண வயசு தான்" பாடல் மூலம் படலாசியராக உருமாறிய நடிகர் சிவகார்த்திகேயனை நாயனாக கொண்டு நெல்சன் உருவாக்கிய "டாக்டர்" 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரண்டு மெகா ஹிட் படங்களை அடுத்து தளபதி விஜயுடன் பீஸ்ட் படத்தில் கமிட் ஆகியுள்ளார் நெல்சன். இவரின் நகைச்சுவை கலந்த ஆக்சன் கதைக்களம் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில்,விஜயுடன் நெல்சன் இணைந்துள்ள பீஸ்ட் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது என்றே சொல்லலாம். மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். 

கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் அனிரூத் தான் நெல்சனின் அடுத்த படைப்பான பீஸ்ட் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் முந்தைய படங்களின் கதைக்களங்கள் போலல்லாமல் மாறுபட்ட பரிமாணத்தில் பீஸ்ட் இருக்குமென கூறியிருந்தது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஜார்ஜியாவிற்கு சென்றிருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள். பின்னர் சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட செட்டுடன் படப்பிடிப்பை முடித்துள்ள பீஸ்ட் படக்குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் ஜார்ஜியாவுக்கு புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் 100 வது நாள் படப்பிடிப்பு கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட விஜயின் புகைப்படங்கள் ட்ரெண்டாகியது.

இந்த படத்திற்கான ஒரு பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடலை அனிரூத் இசையில் விஜயே தனது சொந்த குரலில் படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.