Suriya 41 :18 வருடங்களுக்கு பின் இணைகிறோம்... பாலா படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டு நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
Suriya 41 : பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்காக கன்னியாகுமரியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
எதற்கும் துணிந்தவன் ரூ.200 கோடி வசூல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பாண்டிராஜ் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
சூர்யா - பாலா கூட்டணி
இதையடுத்து இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஷூட்டிங் ஆரம்பம்
இந்நிலையில், சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. கன்னியாகுமரியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா, இப்படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் நடைபெற்றது. அதில் மாடுபிடி வீரர்களுடன் இணைந்து நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. வாடிவாசல் படத்திலும் இயக்குனர் பாலாவின் படத்திலும் நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... Will Smith : முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்றதால் எமோஷனல் ஆன வில் ஸ்மித்... மேடையில் கண் கலங்கினார்