bahubali prabas step father arrested by police

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் பாகுபலி என்றால் அதனை மறுக்க முடியாது...இந்த படத்தில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக வரும் வேங்கடேச பிரசாத் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெங்கடசே பிரசாத் ஐதராபாத்தில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐநாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.அங்கு வேலை செய்யும் பணி பெண்களிடம் சில ஆண்டுகளாகவே தவறாக நடந்து வந்துள்ளார்

இவ்வாறு துன்புறுத்தலுக்குஆளான ஒரு பெண், கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு ஆளாகி உள்ளதாகவும்,7 வருடங்களாக பழகியதில், அப்பெண் இருமுறை கருவுற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கருவுற்று இருக்கும் போது, அதனை கலைக்க சொல்லி வெங்கடசே பிரசாத் பலமுறை விரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது

இதனை தொடர்ந்து தற்போது அந்த பெண் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பின்,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெங்கடசே பிரசாத்தை கைது செய்து,அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது