பாலாவின் பட்டறையில் பட்டை தீட்ட பட்டு இன்று வைரமாக ஜெலிப்பவர் அதர்வா தொடர்ந்து , ஈட்டி , கணிதன் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனால் தற்போது தான் நடித்து வரும் படங்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார் .

இப்போது 'செம போதை ஆகாதே', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் 'பகல் நிலவு' என்னும் படத்தில் மறைந்த பிரபல நடிகரும், அதர்வாவின் தந்தையும் ஆனா முரளி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிரத்னம் தற்போது கார்த்தி, மற்றும் அதிதிராவ் நடித்து வரும் 'காற்று வெளியிடை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அதர்வா படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.