ஜல்லிக்கட்டு கேள்வி.... அந்தர் பல்டி அடித்த ஆர்யா....!!!
நடிகர் ஆர்யா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி பலருக்கும் கோபத்தை வரவைத்தது.
இதனால் பலர் ஆர்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு, நீ தமிழனே இல்லையா...??? படத்தில் மட்டும் நடி... நிஜத்திலும் வேண்டாம் என தாறு மாறாக திட்டி தீர்த்துவிட்டனர்.
இந்நிலையில் அதற்கு இன்று ஆர்யா மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதில் ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் இல்லை, எனது ட்விட்டை சிலர் வேறு திசைக்கு கொண்டு செல்கின்றனர்.
நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றேன்’ என கூறியுள்ளார். இது வாங்கிய திட்டு போதும் என அந்தர் பல்டி அடித்து விட்டார் ஆர்யா என கிசுகிசுக்க படுகிறது.