மனைவியை பற்றி சிவகார்த்திகேயன் சொன்னதும்... கண்ணீர் விட்டு அழுத அருண் ராஜா - ஆறுதல் கூறும் ரசிகர்கள்
ArunRaja Kamaraj : நெஞ்சுக்கு நீதி டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துவின் மறைவு குறித்து உருக்கமாக பேசினார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பனான அருண்ராஜா காமராஜ், அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதையடுத்து மான் கராத்தே, மரகத நாணயம், நட்புனா என்னனு தெரியுமா போன்ற படங்களில் நடித்த அவர், கடந்த 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
கிரிக்கெட் வீராங்கனை ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் பெண்ணின் சாதனைப் பயணத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் சமீபத்தில் சீனாவில் ரிலீசாகி அங்கும் நல்ல வசூல் பார்த்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள படம் நெஞ்சுக்கு நீதி.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படம் ஆர்டிக்கிள் 15 என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் வருகிற மே 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துவின் மறைவு குறித்து உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது: “எங்க வீட்ல யாருடைய படம் ரிலீஸ் ஆனாலும் பர்ஸ்ட் ரெடி ஆகுறது அருண்ராஜாவின் மனைவி சிந்து தான். அவங்க அருண் ராஜா கூட எப்போவும் இருப்பாங்க. அந்த டைம்ல அருண்ராஜாவுக்கு பக்கபலமாக இருந்தது உதயநிதி தான். அவருக்கு நன்றி” என சிவகார்த்திகேயன் கூறியதை கேட்டு எமோஷனல் ஆன அருண் ராஜா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Namitha : பிறந்தநாளன்று கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நமீதா - குவியும் வாழ்த்துக்கள்