விவாகரத்து பற்றி மனம் திறந்த ஆர்த்தி.....!!!
பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்த்தி, 'இதுமாதிரியான வதந்திகள் வெளியாவது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான் அப்போதுதான் நாங்கள் டிரெண்டில் இருப்போம்.
நான் தனியாக செல்லும்போது என் கணவரை பற்றி யாராவது கேட்டால், ஆமாம் நாங்கள் பிரிஞ்சிட்டோம்' என்று தான் சொல்வேன். அப்போதுதான் அவர்கள் என்னை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பார்கள் என்று கூறியுள்ளார் ஆர்த்தி.
மேலும் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பது தான் உண்மை. அதே போல் கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டைகள் இருக்கத்தான் செய்யும்.
அது இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறிய ஆர்த்தி, தன்னை பொருத்தவரை டைவர்ஸ் என்பதுதான் சுதந்திரம். சேர்ந்து வாழ்வதுதான் பெரிய தண்டனை. இந்த தண்டனையில் இருந்து கணேஷ் தப்பிக்கவே முடியாது' என்று கூறினார்.