A.R.Rahuman issue

இசையமைப்பாளர்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் ஒரு பேட்டியின் போது நிருபர் "80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், அதில் வித்யாசமாக பல விஷயங்கள் இருந்தது, ஆனால் தற்போது உள்ளவர்கள் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் பணியாற்றினாலும் அதில் வித்யாசம் காட்டப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், அப்போதைய நிலையில் 'நாற்பது, ஐம்பது, படங்களுக்கு கூட இசை அமைப்பது மிகவும் சுலபம் தான். அவற்றில் எத்தனை பாடல்கள் ஹிட் ஆகிறது என்றுதான் பார்க்க வேண்டும்," என கூறியுள்ளார்.

ரகுமானின் இந்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஏ.ஆர்.ரகுமானின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.