மெளனமாக இருந்து வந்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மௌனம் கலைத்ததும் அரசியலில் பல எதிர்பார்த்த சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. அதிலும் அடுத்து, முதலமைச்சர் பதவியை சசிகலா பிடிப்பாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் பிடிப்பாரா என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ் சென்னை வரவுள்ளதாகவும், அவர் வந்தபின்னர் யார் அடுத்த முதலமைச்சர் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பிரபல நடிகர் அரவிந்தசாமி தமிழக மக்களுக்கு கோரிக்கை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் வைத்துள்ளார். 

தமிழக மக்கள் உடனடியாக தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களையோ, அல்லது உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற தங்களுடைய கருத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், மக்களின் விருப்பத்தை அறிந்து ஜனநாயகப்படிதான் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்தசாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் அவரது ஐடியாவை பாராட்டி வருகின்றனர்.