Asianet News TamilAsianet News Tamil

லீக்கான நடிகை ஜாக்குலின் அந்தரங்க படம்... இணையத்தில் வைரல்...அதிர்ச்சியில் நடிகை !!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அந்தரங்க புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

An intimate photo of Bollywood actress Jacqueline Fernandez has gone viral on a social networking site
Author
India, First Published Jan 9, 2022, 12:57 PM IST

பாலிவுட் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்படுவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இதற்கிடையே நடிகை ஜாக்குலின், பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
An intimate photo of Bollywood actress Jacqueline Fernandez has gone viral on a social networking site

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. அதிமுக பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

An intimate photo of Bollywood actress Jacqueline Fernandez has gone viral on a social networking site

இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

An intimate photo of Bollywood actress Jacqueline Fernandez has gone viral on a social networking site

பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகர் நடிகையின்   விமானம், அவரது ஓட்டல்  மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நடிகை சுகேஷ் மற்றும் ஜாக்குலின் நெருக்கமான இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை இணையவாசிகள் வேகமாக பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios