Asianet News TamilAsianet News Tamil

Ameer : கிடப்பில் போடப்பட்ட ‘சந்தனத்தேவன்’.... அதே கூட்டணியில் புதிய படத்தை தொடங்கிய அமீர்

‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ போன்ற படங்களை இயக்கிய அமீர், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Ameer team up with Sathya and Sanchita Shetty
Author
Tamil Nadu, First Published Dec 5, 2021, 8:04 PM IST

அமீர் இயக்கிய ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மைல்கள் பதித்ததோடு மட்டுமல்லாது, சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகியோருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. சிறந்த இயக்குர் என்பதை நிரூபித்த அமீர், அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

அமீர் நடித்த ‘யோகி’, ‘வடசென்னை’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் "வடசென்னை" படத்தின் வெற்றிக்குப் பிறகு நாற்காலி படத்தில் நடித்தார். அப்படம் சில பிரச்சனைகளால் முடங்கிக் கிடக்கிறது.

Ameer team up with Sathya and Sanchita Shetty

இதையடுத்து நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அமீர், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தை பகைவன் படத்தின் இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.

மேலும் இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க உள்ளார். ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமீரும் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 

Ameer team up with Sathya and Sanchita Shetty

ஆர்யாவின் சகோதரர் சத்யா, அமீர் இயக்கத்தில் உருவான சந்தனத்தேவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சில காரணங்களால் அப்படம் கிடப்பில் போடப்பட்டதால், தனது தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சத்யாவுக்கு ஹீரோவாக நடிக்க அமீர் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios