அடடா... வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய அமலாபால்! யார் அந்த அதிர்ஷ்ட்ரசாலி?
திருமணம், விவாகரத்து, என வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் கடந்து சென்ற போதிலும், அனைத்தையும் தாண்டி சினிமாவில் கவனம் செலுத்தி, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நடிகை அமலாபால்.
திருமணம், விவாகரத்து, என வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் கடந்து சென்ற போதிலும், அனைத்தையும் தாண்டி சினிமாவில் கவனம் செலுத்தி, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நடிகை அமலாபால்.
ஷூட்டிங் இல்லாத போது.. வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆடை' படத்திற்கு கூட அமலாபால், அரைகுறை ஆடை அணிந்து நடித்த போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் தற்போது இவர் கைவசம் ஆறு படங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, இதயம் வரைந்து அதன் உள்ளே 'சிநேகம்' என்று மலையாளத்தில் எழுதி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த சிநேகம் யார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இதனால் அமலாபால் ரசிகர்கள்... யார் அந்த இரண்டாவது அதிர்ஷ்டசாலி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன பதில் கூறுவார் அமலா... என பொறுத்திருந்து பார்ப்போம்.