கொரோனாவை தடுக்க நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி உதவி!
சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.
சீனாவில் துவங்கி, அமெரிக்கா, இத்தாலி, என வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனாவின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதன் கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 900 ஐ எட்டியுள்ளது கொரோனா வைராசல் பாதிக்க பட்டவரின் எண்ணிக்கை. பலி எண்ணிக்கை 20 ஐ தொட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் கோரோனோ பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, பாரத பிரதமர் மோடி , நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் பல பிரபலங்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் நிதியை அறிவித்து வருகிறார்கள், ஏற்கனவே பிரபல நடிகர் பிரபாஸ், 3 கோடி பிரதமரின் நிதிக்கு அளித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி நிதி வழங்கியுள்ளார்.