அஜித் செய்த காரியம்... கோவத்தில் ரசிகர்கள்...!
நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரியும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒட்டு மொத்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்ட மௌன அறவழி போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், கமல், ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இது சமூக அக்கறையோடு நடத்தப்படும் மௌன அறவழி போராட்டம் என்பதால், இந்த போராட்டத்தில் கண்டிப்பாக அஜித் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அஜித், ரசிகர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தப்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகே பெருவாரியாக குவிந்தனர். இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடும் வெய்யிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த இவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே.... காலை 9 மணிக்கு துவங்கப்பட்ட இந்த போராட்டம் முடியும் வரை பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் மட்டும் வரவே இல்லை.
மேலும் எப்போதும் அஜித் ரசிகர்களை உசுப்பேற்றி சண்டை வாங்கும் விஜய் ரசிகர்கள்... சமூக வலைத்தளத்தில் 'விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் விஜய் தான் முதல் ஆளாக போராட்டத்திற்கு வந்தார்' என கூறி வருகின்றனர். அஜித் ரசிகர்களை மிகவும் கோவமாக்கி உள்ளது.