Ajith Fans Arrested : கம்பி எண்ண வைத்த வலிமை மோகம்.... காவலரின் கையை ‘கடித்த’ அஜித் ரசிகர்கள் கைது
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான வலிமை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் நேற்று உலகமெங்கும் ரிலீசாகியது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரில் நேற்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடியுள்ளனர். அதில் இருவர் திரைக்கு முன்பாக சரவெடியை வெடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சுரேஷ் இதைப் பார்த்ததும் ஓடி வந்து இரண்டு பேரையும் தடுத்திருக்கிறார்.
சுரேஷின் பேச்சை கேட்காத அந்த இரண்டு பேரும் பட்டாசை கொளுத்த முற்பட்டிருக்கிறார்கள். இதனால் போலீசுக்கும் அந்த இரு ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது. இதில் காவலர் சுரேஷை சரமாரியாக தாக்கிய அஜித் ரசிகர்கள் அவரின் காக்கி சட்டையை கிழித்ததோடு அவரின் கையை கடித்தும் வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து காவர் சுரேஷ் லால்குடி காவல்நிலையத்தில் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட அஜித் ரசிகர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் டால்மியா புரத்தை சேர்ந்த அருண்குமார், கோபிநாத் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... Valimai Dialogue : ரஜினியை பங்கமாக கலாய்த்த அஜித்... புது சர்ச்சையை கிளப்பிய வலிமை வசனம்