ஐஸ்வர்யா ராய் உலகழகி தான்...அதுக்காக இப்படியா செய்வது..! ஒருவேளை உள்ளூர் கிழவியா?
ஐஸ்வர்யா ராய் என்றாலே அது உலகழகி தான் ... உலகழகி என்றாலே அது ஐஸ்வர்யா ராய் தான் என்ற அளவிற்கு மக்கள் மத்தியில் என்றுமே அவர் உலகழகி தான்....
ஆண்டுதோறும் எத்தனை அழகிகள் தேர்ந்தெடுத்தாலும்,இன்றும் அவர்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ..
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்....உலகிற்கே அழகாக தெரிந்த ஐஸ்வர்யா ராய்....குடும்பத்தில் உள்ளூர் கிழவியாக தான் உள்ளார் ..
காரணம் :
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்,, தனது மகளை மாமியார் ஜெயா பச்சன் அருகில் செல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறாராம்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பலகாலமாக கூறப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே....
அதனை நிரூபிக்கும் விதமாக தன் விஷயத்தில், ஜெயா பச்சன் மூக்கை நுழைப்பது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.இந்நிலையில் தன் மகள் ஆராத்யாவை பாட்டி ஜெயா அருகிலேயே விடுவது இல்லையாம் ஐஸ்.ஆராத்யா ஜெயா பச்சனுடன் இருக்கும் ஒரு புகைப்படம் கூட இல்லை. ஆனால் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளம் உண்டு.
இதற்கு ஐஸ்வர்யா தான் காரணமாம்.ஐஸ்வர்யா வீட்டில் இருந்தால் அவர் தான் ஆராத்யாவை பார்த்துக் கொள்வார். ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் தனது அம்மாவை அழைப்பாரே தவிர மாமியாரை கூப்பிட மாட்டார் என அவருடைய நட்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன