ஐஸ்வர்யா ராய்யை தவிர்க்கும் அபிஷேக் பச்சன்.....!!!
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வருபவர்கள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியினர்.
அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்த வருடம் 'ஹவுஸ் புள் 3' என்கிற ஒரே ஒரு படம் மட்டும் தான் வந்தது.
அடுத்த ஆண்டு தான் தயாரிக்கும் படத்திலேயே நாயகனாக நடிக்க இருக்கிறார்.
தனது கணவர் அபிஷேக் பச்சன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் விருப்பம் தெரிவித்தும், அபிஷேக் பச்சன் அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராய்க்கு தர மறுத்துவிட்டாராம்.
ஏனெனில், தன்னுடைய படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க புதுமுக இளம் நடிகை வேண்டும் என்று தேடி வருகிறாராம்.
பல தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ராய், கால்ஷீட்காக கார்த்துக்கொண்டிருக்கும் போது, அபிஷேக் வேண்டாம் என தவிர்ப்பதால்...., இவர்களுக்குள் சமீபகாலமாக பிரச்சனை இருந்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்க படுகிறது .