மகன்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! வைரல் போட்டோ!
ஹோலி பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மக்களால் குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலர் தாங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய மகன்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹோலி பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள மக்களால் குதூகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலர் தாங்கள் கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய மகன்களுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தீமையை நன்மை வெற்றி கண்டதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலி பண்டிகையில் மக்கள் அனைவரும் வண்ண.. வண்ண.. கலர் பொடிகளை நண்பர்கள், உறவினர்கள், என பாகுபாடின்றி தூவி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் இன்று கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்காக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் வடமாநிலங்களில் மிகவும் விமர்சையாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும், தென்னிந்தியாவில் இன்னும் பிரபலம் அடையாத பண்டிகையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தன்னுடைய இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன், கடந்த சில வருடங்களுக்கு முன் ஹோலி பண்டிகை கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அம்மா மகன்கள் கலர் பொடியை ஒருவர் மேல் ஒருவர் பூசுவது போல் இந்த புகைப்படம் இருக்கிறது.
மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பலரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு தங்களுடைய ஹோலி வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.