Asianet News TamilAsianet News Tamil

படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாசமா வாய்ப்பு இல்ல... நடிகை அதிதி ராவ் பகீர்

பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் டார்ச்சர் பற்றி  துணிச்சலாக பேசியுள்ளார்.

Aditi Rao Hydari Shares Her #MeToo Story, Says 'I Thought I was Never Going to Get Work Again'
Author
Visakhapatnam, First Published Dec 23, 2018, 7:54 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிதி, நான் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன், என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அந்த வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. அப்போது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. 

எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஆனாலும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று  வெளியேறிவிட்டேன். 

Aditi Rao Hydari Shares Her #MeToo Story, Says 'I Thought I was Never Going to Get Work Again'

அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு பட வாய்ப்பே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு நேரம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள். 

தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் தான் செய்ய வேண்டும். மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிதி.

Follow Us:
Download App:
  • android
  • ios