நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன.
ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த அவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டபின் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இவர் கைவசம் சல்பர், எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய், மகத்தின் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா உள்பட ஏராளமான படங்கள் உள்ளன. இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் யாஷிகா, கடந்ததாண்டு ஜூலை மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

சுமார் 4 மாதமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, தற்போது குணமாகி உள்ளார். விபத்துக்கு பின் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த யாஷிகா, தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது யாஷிகா பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். அதில் மலைப்பாம்பு ஒன்றை அலேக்காக தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு நடிகை யாஷிகா கூலாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘செம்ம தில்லு தான் இந்த பொண்ணுக்கு’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
