Asianet News TamilAsianet News Tamil

மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்து... யாஷிகா ஆனந்த் படுகாயம்... தோழி மரணம்..!

மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Actress Yashika anand met with a terrible car accident near mamallapuram
Author
Chennai, First Published Jul 25, 2021, 7:33 AM IST

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

Actress Yashika anand met with a terrible car accident near mamallapuram

நேற்று யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த் சென்று கொண்டிருந்த கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Actress Yashika anand met with a terrible car accident near mamallapuram

இந்த பயங்கர விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios