சீமானால் வஞ்சிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி... தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...!
இந்நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தார். இதனிடையே சீமானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.
இதனிடையே, சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் மிரட்ட ல் விடுத்திருந்தார். கடைசியாக சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நடிகர் ராணாவை ஓட ஓட விரட்டும் கொரோனா... தீயாய் பரவும் தொற்றால் திருமண இடம் மாற்றம்?
விஜயலட்சுமியின் வீடியோவிற்கு பதிலடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் பலரும் அவரை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். பலமுறை நாம் தமிழர் கட்சியினர் தன்னை விபாச்சாரி என தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், கேவலமான வார்த்தைகளால் பேசுவதாகவும் விஜயலட்சுமி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4-ல் பூனம் பஜ்வா?... கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வலம் வர எவ்வளவு லட்சம் சம்பளம் தெரியுமா?
இந்நிலையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் சீமான் தான் தனது மரணத்திற்கு காரணம் என்றும், அவரது கட்சியினர் என்னை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்ததால் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ள நான், இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ள. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.