கடைசி வரைக்கும் நாயோடவே கிடந்து சாகப்போறியா?... லந்து கொடுத்த நெட்டிசனுக்கு சவுக்கடி பதிலளித்த சமந்தா
samantha : செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த சமந்தா, அதனை இவ்ளோ நாள் மிஸ் பண்ணியதாக பதிவிட்டு இருந்தார்.
தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 66 கோடி வசூலைக் குவித்து மாபெரும் வெற்றியை பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா.
தற்போது நடிகை சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்கிற படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா. இதில் யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் குஷி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வரும் சமந்தா, ரசிகர்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த சமந்தா, அதனை இவ்ளோ நாள் மிஸ் பண்ணியதாக பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில், கடைசி வரைக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுடன் கிடந்து சாகப்போகிறார்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த சமந்தா, அப்படி நடந்தால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுவேன் என பதிவிட்டிருந்தார். சமந்தாவின் இந்த பதிலடியை பார்த்ததும் பயந்துபோன நெட்டிசன், அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... விக்ரம் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் கேங்கை களமிறக்கிய கமல்... ஆண்டவரே வேறலெவல் என பாராட்டும் நெட்டிசன்கள்