Samantha: நான் காலேஜ் படிக்கும் போது சூர்யாவின் வெறித்தனமான ரசிகை...நடிகை சமந்தாவின் சுவாரஸ்யமான பதிவு....
Samantha: நான் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே, சூர்யாவின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறேன் என்று நடிகை சமந்தா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நான் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே, சூர்யாவின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறேன் என்று நடிகை சமந்தா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த சமந்தா:
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தி ஃபேமிலி மேன் 2 சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார்.
இவர் தமிழ் சினிமாவில், பானகத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதையடுத்து, இவர் நடித்துள்ள ஈ படம் இவருக்கு கை கொடுக்க, அடுத்தடுத்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமந்தா, நாக சைத்தன்யா:
இதையடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, இருவருக்கும் ஒத்து வராததால், சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.
சமந்தா, நாக சைத்தன்யாவுடனான விவாகரத்திற்கு பிறகு ஹாலிவுட், பாலிவுட் என தனது பணியில் பிஸியான உள்ளார்.
தற்போது, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதேபோன்று, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
சூர்யாவை பற்றி நெகிழ்ச்சி பதிவு:
சூர்யாவின் தீவிர ரசிகை நான் சின்ன வயசில் இருந்தே, சூர்யாவை ரொம்ப பிடிக்கும். நான் 11 இம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக பார்த்த தமிழ் திரைப்படம் காக்க காக்க. அதுக்கு பிறகு தான் நிறைய தமிழ் படங்கள், பார்க்க ஆரமித்தேன்.
எனது கல்லூரி நாட்களில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என்று எண்ணி இருக்கிறேன். எப்போதும் கல்லூரி கலை விழாக்களில் கடைசி இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பேன். ஒரு தடவை ஸ்டெல்லா கல்லூரியில் எங்களோட கலைநிகழ்ச்சிக்கு சூர்யா வந்திருந்தாரு. ஆனால், அன்னைக்கு மட்டும் முதல் வரிசையில அமர்ந்து சூர்யானு கத்திட்டு கூச்சலிட்டு இருந்தோம்.
அப்போ யாரவாது வந்து என்கிட்ட நீ சூர்யாவோடு நடிப்பியானு கேட்டிருந்தா, சத்தியமா நம்பியிருக்க மாட்டேன். இப்போது நான் அஞ்சான் 24 உள்ளிட்ட படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்து விட்டேன்.
அதுமட்டுமின்றி, தமிழ் படங்களில் முதல் முறையாக எனது சொந்த குரலில் பேசி இருக்கிறேன். தமிழ் எனது சொந்த மொழி என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.